தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது. அதன் மீது பரிதாபப்பட்ட ஒரு சந்நியாசி, அதை எடுத்து வெளியில் விட முயன்றார். அது அவரைக் கொட்டிவிட்டு மறுபடியும் நீரில் விழுந்தது. மீண்டும் அதனை எடுத்து விட்டார். மீண்டும் அது கொட்டிற்று.

'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று ஒருவர் கேட்டார்.

சந்நியாசி சொன்னார் :
'கடைசி வரை அது தன் சுபாவத்தை விட வில்லை. அது போல... நானும் நன்றி செய்கின்ற எனது கடமையில் இருந்து தவறவில்லை, இதுவே சுதர்மம்', என்றார்.

1 comments:

ஆம். நானும் இதை பல முறை படித்து நடைமுறையிலும் இயன்ற அளவிற்கு கடைப்பிடிக்கிறேன்.நன்றி.

Post a Comment